search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தீக்குளித்து தற்கொலை"

    • ஜோதிமணி மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டார்.
    • இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி முனியப்பன் கோவில் தெரு வை சேர்ந்தவர் செங்கோ ட்டையன். இவரது மகள் ஜோதிமணி (வயது 31).

    இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளிப்பட்டி கொண்டைய ம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஜோதிமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கண வரை விட்டு பிரிந்து தந்தை செங்கோட்டையன் பராம ரிப்பில் வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது

    இதையடுத்து உடல்நிலை பாதித்த ஜோதிமணி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று ஜோதிமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

    இதில் ஜோதிமணி உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது அண்ணன் மணிக ண்டன் அப்பாகூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


    • நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி வ.உ.சி. நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி முத்துமணி (வயது 42). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் மனோஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்

    கோவை :

    விருதுநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 44). அவரது மனைவி சரண்யா (34). இவர்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் குடும்பத்துடன் கோவை சூலூர் வந்தனர். பின்னர் கள்ளப்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி கணவன்-மனைவி இருவரும் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் ராமகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ராமகிருஷ்ணன் வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.அப்போது சரண்யா, ராமகிருஷ்ணனை கண்டித்து சத்தம் போட்டார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் சரண்யா மனவேதனை அடைந்தார்.

    திடீரென விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீவைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் மளமளவென பரவியது. அவர் வலி தாங்கமுடியாமல் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீ அணைத்து சரண்யா மீட்டனர்.பின்னர் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.2 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தியாகதுருகம் அருகே 2-வது திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 41) இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கவுசல்யா( 21) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் கவுசல்யா 2-வது திருமணம் செய்து கொண்ட மனவருத்தத்தில் இருந்ததார். சம்பவத்தன்று முடியனூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த கவுசல்யா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தாய் அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவருக்கு 2 வயதில் யோகேஸ் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகன் ஊதாரித்தனமாக சுற்றியதால் வேதனையடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி சமத்துவப்புரத்தை சேர்ந்தவர் பாலையா (வயது58). இவரது மனைவி நீலாவதி (48). இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் முல்லையம்பட்டியில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருவதாக பெற்றோரிடம் கூறினார்.

    ஆனால் வேலைக்கு சரிவர செல்லாமலும் வீட்டில் இருந்து பணத்தை வாங்கி அதனை வீண் செலவு செய்து வந்துள்ளார். தாய் பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை.

    இதனால் மனமுடைந்த நீலாவதி தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×